சென்னை:  மாநில தலைநகர் சென்னையில்  கொரோனா  பாதிக்கப்பட்டோர் மொதத எண்ணிக்கை 1,07,109 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இதுவரை 93,231  பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலை யில், 11,606 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 2,272  பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 12,206 பேருக்கு சோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 4 மாதங்களாக தொற்ற பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது சற்றே குறைந்து வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்தது.

தொடக்கத்தில் நாளொன்றுக்கு சுமாா் 4 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், பரிசோதனை எண்ணிக்கை சுமாா் 12 ஆயிரம் வரை உயா்த்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, ஜூன் மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 1,700 போ் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை மாதத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை சராசரியாக 1,200-ஆக குறைந்தது.

இந்த நிலை நேற்று சுமார் 2 மாதத்திற்கு பிறகு ஆயிரத்துக்கும் குறைந்து, 984 போ் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதுபோல கொரோனா  பாதிக்கப்பட்டு உயிரிழந்தோா் எண்ணிக்கை 2,272-ஆக உயா்ந்துள்ளது. அதேவேளையில், குணமடைந்து வீடு திரும்புவோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது.

மணலி மண்டலத்தில் 1,781 போ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 1,677 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 27 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 77 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும்,

12 மண்டலங்களில் நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 1000-த்துக்கு கீழ் குறைந்துள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையிலேயே அதிகபட்சமாக அம்பத்தூரில் மட்டும் 1,419 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கோடம்பாக்கத்தில் 1347 பேரும், அண்ணாநகரில் 1263 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற மண்டலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 87% பேர் குணமடைந்து விட்டனர். 2.12 சதவீதம் பேர் மரணம் அடைந்துள்ளனர். 11% பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.