சென்னை

முதிய பயணி ஒருவரை வண்டலூரில் தாக்கிய பேருந்து ஓட்டுநன்ர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநகர பேருந்து ஒன்றில் சென்னையை அடுத்த வண்டலூரில் வயது முதிர்ந்த பயணி ஒருவர் ஏறி உள்ளார்.  அந்த வயது முதிர்ந்த பயணி யை ஓட்டுநரும், நடத்துநரும் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் வண்டலூரில் முதியோருக்கான பாஸ் எடுத்து, பஸ்சில் ஏறியுள்ளார்.  அவரை முதியோர் இருக்கையில் அமரக்கூடாது என நடத்துநர் கூறியதால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முடிவில் கைகலப்பாக மாறியதாக தகவல் வெளியானது.

வீடியோ வைரலான நிலையில் இது குறித்து, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.டி.சி இயக்குநர் பிரபு சங்கர் உறுதி அளித்தார்.

அவ்வாரு தீவிர விசாரணைக்கு பிறகு மாநகர பஸ்சில் ஏறிய முதியவரை ஓட்டுநர், நடத்துநர் தாக்கிய சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துரை பணியிடை நீக்கம் செய்து எம்.டி.சி இயக்குநர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.