பெங்களூரு

ந்திய தொழில்நுட்பத்தில் தயாரிப்பட்ட ஆளில்லா விமான சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்  அறிவித்து உள்ளது.

இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில், ருஸ்டம் என பெயரிடப்பட்ட ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு  வருகின்றன. ஏற்கனவே ரூஸ்டம்-1 வெற்றிகரமாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், முழுவதும் உள் நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட நிலையில் ரூஸ்டம்-2  தயாரிக்கப்பட்டது.

இதன் சோதனை ஓட்டம்  கர்நாடகத்தின் சித்ரதுர்கா மாவட்டத்துக்கு உட்பட்ட சலக்கேரில் நடந்தது. இந்த சோதனை வெற்றி கரமாக நடந்ததாக  மத்திய பாதுகாப்புத்துறை செயலாளரும், டி.ஆர்.ஓ.டி. தலைவருமான கிறிஸ்டோபர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிறிஸ்டோபர், இந்த ஆளில்லா விமானம் (டிரோன்)  அமெரிக்காவின் பிரிடேட்டர் ஆளில்லா விமானத்துக்கு சமமானது என்றும்,   நடுத்தர உயரத்தில், நீண்ட நேரம் பறக்கும் திறன் வாய்ந்தது என்று கூறினார்.

மேலும், இந்த விமானம் மூலம்   எதிரிகளின் இடங்களை கண்காணிப்பதுடன், ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறனும் உடையது என்ற அவர், இந்த விமானம்   தொடர்ந்து 24 மணி நேரம் வரை ஒரே கட்டமாக பறக்கும் திறன் வாய்ந்தது என்றும் குறிப்பிட்டார்.