டெல்லி: ஓய்வுபெற்ற தமிழக முன்னாள் டி.ஜி.பி கருணா சாகர் காங்கிரஸில் இணைந்தார்.  இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

தமிழ்நாட்டில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கருணா சாகர். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர், 1991ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார். தமிழக டி.ஜி.பி.யாக பணியாற்றி ஒய்வு பெற்ற பின்  பீகார் மாநிலத்தில்,  லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியில் கடந்தாண்டு இணைந்து அரசியல் பணி செய்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று (மே 1ந்தேதி) திடீரென அங்கிருந்த விலகி,  பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருடன்,  அவரது மனைவி அஞ்சுவும் காங்கிரஸில் இணைந்தார்.