டில்லி:

இந்தோ-திபெதியன் எல்லை போலீசார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில், ‘‘ இந்தியா-சீனா எல்லையில் உள்ள டோக்லாம் பிரச்சினைக்கு விரைவில் சுமூக தீர்வு காணப்படும். இந்த விவகாரத்தில் சீனா நேர்மறையான நடவடிக்கையை கடைபிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தியா அமைதியயே விரும்புகிறது என்று அனைத்து அண்டை நாடுகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா தன்னுடைய எல்லையை விரிவாக்க விரும்பியது கிடையாது. எனினும், இந்திய பாதுகாப்பு படைகளுக்கு எல்லையை பாதுகாக்கும் அனைத்து வல்லமையும் உள்ளது” என்றார்.