Untitledgg

மூன்றாம் பாலினத்தவர் ஒருவருக்கு  நாட்டிலேயே முதல்முறையாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அகாய் பத்மஷாலி என்பவர் தான் அந்த பெருமையைப் பெற்ற திருநங்கை. இவருக்கு,  பெங்களூருவில் இயங்கி வரும் Indian Virtual University for Peace and Education என்ற பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
ஐ.நா.சபையின் அங்கமாக விளங்கும் இந்த பல்கலைக்கழகம் மூன்றாம் பாலினத்திற்காக நீண்ட நாளாக குரல் கொடுத்து வரும் பத்மஷாலியின் சேவையை பாராட்டி கொரவ டாக்டர் பட்டத்தை அளித்துள்ளது. .
இதன் மூலம் இந்தியாவிலே கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை  அகாய்  பெற்றுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த பட்டம் எனக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது. என்னுடைய பயணத்தை மேலும் உற்சாகத்துடன் தொடர்வதற்கு  புது ஊக்கம் கிடைத்துள்ளது” என்றார்.