பத்மாவத் படத்தில் தீபிகா படுகோன் அணிந்திருந்த மாடல் போன்ற நகைகள்தான் இந்தியாவில் அதிகமாக விற்பனை ஆகின்றன என்று நகை வியாபாரிகள்  தெரிவிக்கிறார்கள்.

தீபிகா படுகோன் நடிப்பில் பத்மாவத் படம் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வெளியானது. மக்களிடம் பெரும் ஆதரவு பெற்ற இத்திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது.

இந்தப் படத்தில் ராணி பத்மாவதி கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன் அணிந்திருந்த நகைகளுக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்த பெண்கள் தீபிகாவின் நகைகள் பற்றியே புகழ்ந்து பேசினர். பழங்கால பாரம்பரிய வடிவத்தில் அந்த நகைகள் வடிமைக்கப்பட்டு இருந்தன.

 

தற்போது தீபிகா படுகோன் அணிந்த நகைகளைப் போன்று வடிவமைக்கப்பட்ட நகைகள் வட மாநிலங்களில் விற்பனைக்கு வந்திருக்கின்றன.  பல நகைக்கடையில் இந்த வகை நகைகள் விற்பனைக்கு வைத்து இருக்கிறார்கள். திருமணங்களுக்கு இவற்றை மக்கள் வாங்கி செல்கிறார்கள். மணப்பெண்களும் இந்த நகைகளை அணிவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

தற்போது அதிகம் விற்பனையாகும் மாடல், பத்மாவத் மாடல் நகைகள்தான் என்கிறன்றனர் நகை வியாபாரிகள்.