சென்னை: கொரோனா தொற்று அறிகுறி காரணமாக,  பொதுமக்கள் ரெம்டெசிவர் மருந்தை  வீடுகளில் எடுக்க வேண்டாம் என்றும்,  தமிழகத்தில் இறப்பு 2.9 சதவிகதமாக உள்ளது,  உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டால், பதற்றத்துடன்   மருத்துவமனைகளில் குவிய வேண்டாம் அருகிலுள்ள சுகாதார நிலையங்களை நாடுங்கள் என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும், ஒரு நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட  ஆக்ஸிஜன் உற்பத்தி கலன்  சென்னை அண்ணா நகர் புறநகர் மருத்துவமனையில்அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன கூறியதாவது,.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இறப்பு விகிதம் 2.9 சதவீதமாக உள்ளது. இன்று தேசிய அளவில் 2,620 நபர்களும், தமிழக அளவில் 78 நபர்களும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போதைய நிலையில், 95,048 பேர் கொரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24,569 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது 25.8 விழுக்காடு ஆகும்  48,289 பேர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர். அதன் விழுக்காடு 50.8 ஆகும். கொரோனா கவனிப்பு மையங்களில் 8,414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன் விழுக்காடு 8.85 ஆகும்.

கொரோனா அறிகுறிகள் இருந்தால் காய்ச்சல் முகாம்களில் சென்று சோதனை செய்துகொள்ளுங்கள். அங்குள்ள மருத்துவர் உங்களை சோதனை செய்து உங்களுக்கான சிகிச்சை முறையை வழங்குவார். பொதுமக்கள் பதட்டமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்.

சிக்கலான தருணங்களில் 108 அல்லது 0444- 6122300 என்று எண்களை அழையுங்கள். அதே போல 104 எண்ணையும் அழைக்கலாம்.

தமிழகத்தில் தேவையான கொரோனா தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளது. தற்போதுபலர், கொரோனா அறிகுறி தென்பட்டா ல, ரெம்டெசிவிர் மருந்தை எடுத்துக்கொள்கின்றனர்.  அவ்வாறு செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள். இது அனைவருக்கும் தேவையில்லை.

தமிழகம் முழுவதும் உள்ளமருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அடுத்த 10 நாட்களுக்கு  பொது மருத்துவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் கூடுதலாக 2,400 ஆக்ஸிஜன் கொள்கலன்களை கூடுதலாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.