சென்னை:
விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல என்று தூத்துக்குடி எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த சூழலில் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான பணிகளை தூத்துக்குடி எம்.பி.கனிமொழி இன்று ஆய்வு செய்தார். அத்துடன் இந்து அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.