துரை

த்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரையில் வழக்குப் பதியப்பட்டு ள்ளது. 

கர்நாடகாவில் பெங்களூரு நசரத்பேட்டையில் ஒரு கடையில் அனுமன் பஜனை பாடல் ஒலிபரப்பியதால் கடையின் உரிமையாளரை சிலர் தாக்கியதைக் கண்டித்து பாஜக சார்பில் நேற்று அந்த பகுதியில் போராட்டம் நடந்தது. மத்திய மந்திரி ஷோபா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்குப் பிறகு ஷோபா செய்தியாளர்களிடம்,

“பெங்களூரு விதான சவுதாவில் சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிடுகிறார்கள். அவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று அங்கிருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள். அவர்கள் மீதும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கேரளாவில் இருந்து வந்து கர்நாடகத்தில் கல்லூரி மாணவிகள் மீது திராவகம் வீசுகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.  தற்போது அனுமன் பஜனை பாடலை ஒலிபரப்பிய கடையின் உரிமையாளரைத் தாக்கியுள்ளனர். இந்த அரசு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. ஓட்டு அரசியலை மனதில் கொண்டு காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது”  

என்று தெரிவித்திருந்தார்.

ஷோபா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

இதையொட்டி திமுக சார்பில் தீர்த்தல் ஆணையத்தில்  அளிக்கப்பட்ட புகார் மனுவில் ,

“மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் பேச்சு கர்நாடக மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் இடையே பகை மற்றும் வெறுப்புணர்வை வளர்க்க முயல்கிறது. தமிழ்நாட்டு மக்களைத் தீவிரவாதிகள் என்று பொதுமைப்படுத்தி தமிழர்கள் மற்றும் கன்னடம் பேசும் மக்கள் என இரு சமூகத்தினரிடையே குழப்பத்தை உருவாக்க முயல்கிறது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் வெறுப்புணர்வைத் தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் சாத்தியம் உள்ளது” 

என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது  இரு தரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  அதாவது ஷோபா மீது 153, 153(A), 505(1)(B), 505(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.