சென்னை

திமுக பவள விழா, முப்பெரும் விழாவில் வழங்கப்படும் விருதிகளை அறிவித்துள்ளது.

இன்று திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக பவள விழா ஆண்டு மற்றும் முப்பெரும் விழாவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 17-ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

* பெரியார் விருது: பாப்பம்மாள்

* அண்ணா விருது: அறந்தாங்கி மிசா இராமநாதன்

* கலைஞர் விருது: எஸ்.ஜெகத்ரட்சகன்

* பாவேந்தர் விருது: கவிஞர் தமிழ்தாசன்

* பேராசிரியர் விருது: வி.பி.இராஜன் 

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.”

என்று கூறப்பட்டுள்ளது.