சென்னை

சென்னை மக்களுக்குக் காற்று மாசு காரணமாகச் சர்க்கரை நோய் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட சில நகரங்களிலும் டில்லியைப் போலவே காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது. அதாவது உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த வரம்பை விட காற்றின் தரம் மோசமாக உள்ளது. இப்படி மாசுபட்ட காற்றைச் சுவாசிப்பதால் “டைப் 2” நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கலாம் என ஆய்வு முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது .

சென்னை மற்றும் டில்லியில் காற்று மாசுவுக்கும் டைப்-2 நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உள்ளதாகச் சர்வதேச பத்திரிக்கைகளில் 2 ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.  இந்த ஆய்வு மொத்தம் 12 ஆயிரம் நபர்களிடம் நடத்தப்பட்டுள்ளது

இந்த ஆய்வில் அதிக அளவு மாசுபட்ட காற்றைச் சுவாசிப்பது, குறிப்பாகத் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்ட பிஎம் 2.5 நுண்துகள்கள் கொண்ட காற்றைச் சுவாசிப்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதற்கு வழிவகுத்தது தெரியவந்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் மற்றும் சீனாவிலும் உறுதிப்படுத்தப்பட்ட இந்தத் முடிவு  இப்போது இந்தியாவின் நகர்ப்புறங்களிலும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.