வங்கதேசம் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.

bangladesh

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பழமையான அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று முன் தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருபில் ரசாயனப் பொருட்களை சேமித்து வைக்கும் குடோனில் பற்றியத் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது.

ரசாயனப் பொருள்களில் ஏற்பட்ட தீ வேகமாகமாக பரவியதால் அந்ந இடமே கருமேகம் சூழந்தது போன்று காணப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சுமார் 200 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ அனைத்து குடியிருப்புகளில் பரவியதில் முதல் கட்டமாக 69 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளதாகவும், தீக்காயம் ஏற்பட்ட பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.