டில்லி

காங்கிரஸ் கட்சி கார்கே பிரதமராவதை ஏற்றுக் கொள்ளுமா என தேவேகவுடா கேட்டுள்ளார்.

மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சியில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பங்கேற்றார். தமது வாழ்நாளின் இறுதியில் தனது அரசியல் போக்கை மாற்றிக்கொண்டதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய கருத்துக்கு தேவேகவுடா பதிலளித்தார்.

அவர் செய்தியாளர்களிடம்,,

“எனது ஜனதா தளம் (எஸ்) கட்சியை அழிக்க நினைத்த சில காங்கிரசாரிடம் இருந்து கட்சியைக் காப்பதற்காகவே பாஜகவிற்கு நான் ஆதரவளித்தேன்  மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக முதல்வராகப் பதவியேற்க வேண்டும் என்று நான் கூறியபோது, எனது மகன் குமாரசாமியை முதல்வராக்க வேண்டும் எனக் காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியது.

அதே வேளையில் காங்கிரஸ் தலைவர்கள் 13 மாதங்களுக்குள் குமாரசாமியை நீக்கினர் . எனது மகன் காங்கிரஸால் நீக்கப்பட்ட போதுதான், நான் என் மகனை பாஜகவுடன் இணையுமாறு வலியுறுத்தினேன். காங்கிரஸ் கட்சி உன்னை வளர அனுமதிக்காது என்று என் மகனிடம் கூறினேன்.

மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் இந்த நாட்டின் பிரதமராக விரும்புகிறாரா? காங்கிரஸ் கட்சி அதை ஏற்றுக்கொள்ளுமா? காங்கிரஸ் கட்சியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.  சுமார் 35-40 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் உள்ள தூய்மையான மனிதர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் வேட்பாளருக்காக அவரது பெயரைக் குறிப்பிட்டபோது என்ன நடந்தது? கார்கேவின் சொந்த கட்சியினரே அதை எதிர்த்தனர்.

எனது ஆதரவை வழங்க முடிவு செய்தது எனது தனிப்பட்ட நலனுக்காக  இல்லை.  ஆயினும் இதற்குப் பலனாகப் பிரதமர் நரேந்திர மோடி காட்டிய அன்பும், பாசமும் எனக்கு கிடைத்துள்ளது.”

என்று தெரிவித்தார்.