லாஸ் வேகாஸ்

மெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மைக் பென்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கமாகு,. எனவே வரும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்கா  இரு கட்சி ஆட்சி முறையைக் கொண்ட நாடு ஆகும். அமெரிக்காவில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரு கட்சிகள் மட்டுமே போட்டியிடும்.

அமெரிக்காவில் தற்போது ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெற்று ஜோ பைடன் அதிபராக உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் பலரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலரும் போட்டியில் இறங்கி வருகின்றனர்.

குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் தானும் போட்டியிட இருப்பதாகக் கூறியிருந்த நிலையில் மைக் பென்சும் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.  தற்போது அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மைக் பென்ஸ் அறிவித்துள்ளார்

அவர் லாஸ் வேகாசில் நடந்த குடியரசுக் கட்சியின் யூதக் கூட்டணி கூட்டத்தில்

 “மிகவும் பிரார்த்தனை மற்றும் ஆலோசனைக்குப் பிறகு, அதிபருக்கான எனது பிரச்சாரத்தை இன்று நிறுத்த முடிவு செய்துள்ளேன். எனக்கு இது தெளிவாகிவிட்டது: இது எனது நேரம் அல்ல,”

என்று தெரிவித்துள்ளார்.