புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டெல்லி பற்றியெறிய வேண்டுமென்பதுதான் நோக்கம் என்று தாக்கியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக மக்களவை உறுப்பினருமான கெளதம் கம்பீர்.

கெளதம் கம்பீர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, “உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்ட போதிலும், உறுதியைக் காட்டிய நமது வீரமிக்கவர்களை அமித்ஷா சந்தித்தார். ஆனால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடமிருந்து ஒரு கண்டன வார்த்தை கூட இல்லை. டில்லி பற்றி எரிய வேண்டும் என அவர் விரும்பியது இதன் மூலம் தெளிவாகிறது.”

குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை துரதிருஷ்டவசமானது. அதற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பிரச்சினைகள் நீடிக்கும் வரை விவசாய சட்டங்களுக்கு எதிரான இயக்கத்தினை முடிவுக்கு கொண்டு வர முடியாது.

அமைதியான முறையில் போராடும் விவசாயிகளுக்கு எங்களது ஆதரவு உண்டு” என கூறியுள்ளார் கம்பீர்.