டெல்லி: டெல்லியில் பிப்ரவரி 5ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அந்தந்த மாநிலங்களில் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் தலைநகர் டெல்லியில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 5ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.