புதுடெல்லி:
டெல்லி, ஜஹாங்கீர் புரி கல்வீச்சு சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்டலத்தில் இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டதில் பலர் காயமடைந்தனர்.கலவரக்காரார்கள் சுட்டதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், டெல்லி, ஜஹாங்கீர் புரி கல்வீச்சு சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் *தவறு செய்தவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.