டெல்லி

முதல்வர் கெஜ்ரிவாலிடம் என் ஐ ஏ விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.

அமலாக்கத்துறை டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையி்ல் நடந்த பண மோசடி தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

கெஜ்ரிவால் கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான காலிஸ்தான் அமைப்பின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியதாகவும், அப்போது தேவிந்தர்சிங் புல்லார் என்ற காலிஸ்தான் பயங்கரவாதி விடுதலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பின் அந்த அமைப்பிடமிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் நிதியுதவி பெற்றதாகவும் புகார் எழுந்தது.

எனவே இது தொடர்பாக  முதவ்வர் கெஜ்ரிவாலிடம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, பரிந்துரை செய்துள்ளார்.