டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சவாடிகளில் குடியரசு தலைவர் முர்மு, மாநில கவர்னர், மாநில முதல்வர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்பட மத்திய, மாநில அமைச்சர்கள் தங்களது ஜனநாயக கடமைகளை ஆற்றினர்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அங்கு மொத்தம் உள்ள தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிப்ரவரி 5ந்தேதியான இன்று வாக்குப்பதிவு நடெபற்று வருகிறது.
இந்த தேர்தலில் மொத்த 70 தொகுதிகளிலும் ம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.
இந்த நிலையில், இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவ தொடங்கியது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.


டெல்லி சட்டசபை தேர்தலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிர்மான் பவன் வாக்குச்சாவடிக்குயில் தனது வாக்கினை பதிவு செய்தார். பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு வந்த ராகுல் காந்தி தனது ஜனநாயக கடமை ஆற்றினார்.
கடந்த முறை குடும்பத்துடன் சென்று வாக்களித்த ராகுல் காந்தி இம்முறை தனியாக சென்று வாக்களித்தார்.
மேலும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பல அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என பல தரப்பினரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.