டில்லி,

டைபெற்று முடிந்த டில்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற வருகிறது.

270 இடங்களை கொண்ட டில்லி மாநகராட்சிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை வெளிவிந்துள்ள தகவலின்படி பாரதியஜனதா முன்னிலையில் உள்ளது.

அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தை பிடிக்க காங்கிரசும், ஆம்ஆத்மியும் மோதுகிறது.

காலை 9.30 மணி நிலவரப்படி  பாஜக-157 வார்டுகளிலும், ஆம் ஆத்மி-38 வார்டுகளிலும், காங்கிரஸ்-26 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளது. டெல்லியில் உள்ள 272 வார்டுகளில் 270 வார்டுகளுக்கு மட்டும் கடந்த ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.