ந்திய அரசியல் களத்தில் ஆளுமையாக விளங்கிய விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் முதலமைச்சர்கள்  வரிசையில், இரும்புப் பெண்மணியாக விளங்கியவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா. இன்று அவரது 4வது நினைவு தினம்.

எம்.ஜி.ஆர். உருவாக்கிக் கொடுத்த அ.தி.மு.க.வை ராணுவ கட்டுப்பாட்டோடு  வழி நடத்தியவர்…அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, தனி ஒருவராக சட்டசபைக்கு சென்று, தைரியமாக  தனது கருத்துகளை பதிவு செய்தவர்… என பல்வேறு பெருமைகளையும், ஆளுமைத்திறன் கொண்டவராக விளங்கிய முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 4 ஆண்டுகள்  நிறைவு பெறுகிறது

ஜெயலலிதா என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமள வள்ளி. இவர் ஜெயராம்  மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு 1948ம் ஆண்டு பிப்ரவரி  24ந்தேதேதி மகளாக கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள மெலுகொட்டே என்ற பகுதியில்  பிறந்தார்.  அவரது குடும்பம் அரச மைசூர் வம்சாவழியை சார்ந்து வாழ்ந்து வந்தது.  அவருடைய தாத்தா மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றியதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா தனது இரண்டாவது வயதிலேயே தன் தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவர் தனது தாயுடன் சேர்ந்து தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் சில ஆண்டுகள் ‘பிஷப் கார்ட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவர் சென்னைக்கு வந்தார். சென்னையிலுள்ள ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது கல்வியைத் தொடர்ந்த இவர், பின்னர் ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்’ தனது பட்டப்படிப்பை முடித்தார்.

தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது தாயார் அவரை திரையுலகில் அறிமுகப்படுத்துவதிலேயே ஆர்வம் கொண்டார்.  அதன் காரணமாக, தனது   15 வயதில், அவர் ஒரு முன்னணி கதாநாயகனுடன் அறிமுகமானார். அதுவே அவருடைய புகழ்பெற்ற திரைப்பட தொழிலுக்கு ஆரம்பமாக அமைந்தது.

ஷங்கர். வி. கிரி அவர்கள் இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், அப்படம் அவருக்கு எந்த பாராட்டும் பெற்றுத் தரவில்லை. ஆனால்,  1964ம் ஆண்டு , திரையுலகில் அவருக்கென்று ஒரு தனி வழியையும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடமும் பிடித்தார்.

ஜெயலலிதா அவர்களின் முதல் இந்திய படம், 1964 ல் வெளியான “சின்னடா கொம்பே” என்ற கன்னட படம். இப்படம் அவருக்கு பெரும் விமர்சனங்களையும், பார்வையாளர்களின் கைத்தட்டலையும் பெற்றுத் தந்தது.  ஒரு வருடம் கழித்து, அவர்  “வெண்ணிற ஆடை” என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார். அதன் பிறகு, அவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வந்தார். அவர் நடித்த பல படங்கள் நன்றாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது.

நடிகர் எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி பெரும் வெற்றி பெற்றுத் தந்தது மற்றும் அவரது ஆர்வலர்களையும் மிகவும் கவர்ந்தது. திரையுலகின் பிற்பகுதியில் அவர் ஜெய்ஷங்கர்,  விச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1968ல், அவர் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அரசியலில் சேரும் முன் தனது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை அவரது கடைசி மோஷன் பிக்சர் படமாக 1980ல் வெளியான  “நதியை தேடி வந்த கடல்” திரைப்படம் இருந்தது.

அதே ஆண்டில் (1980), அஇஅதிமுக நிறுவனரான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், ஜெயலலிதா அவர்களை பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இதுவே, அவரை திறம்பட இந்திய பாராளுமன்றத்திற்கு செயல்பட வழிவகுத்தது.  அவருடைய செயல், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியாலும் பாராட்டப்பட்டது. பின்னர், அவர் தீவிரமாக அஇஅதிமுக அரசியல் கட்சி உறுப்பினராக ஈடுபட்டார். அவர் அரசியலில், எம்.ஜி. ஆரின் கட்சி சார்புடையவராக திகழ்ந்தார். இதுவே, ஜெயலலிதா அவர்களை, அஇஅதிமுக கட்சியின் எதிர்கால வாரிசாக, ஊடகங்களை மதிப்பிட செய்தது

எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தலைமை அமைச்சராக பணியாற்றிய போது, ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர்-இன் மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரன் அவர்களை அதிமுகவின் எதிர்கால தலைவராக சில கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். இதன் காரணமாக கட்சி இரண்டாக பிரிந்தது –ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டது.எனினும், 1988 ஆம் ஆண்டில் அவரது கட்சி,  இந்திய அரசியலமைப்பின் 356 கீழ் தள்ளுபடி செய்யப்பட்டது. 1989ல், அதிமுக கட்சி ஒன்றுபட்டு, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது.

ஜெயலலிதா மேல் பல குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் இருந்தாலும்,  அவர் 1991, 2001, 2011, 2016  ஆகிய ஆண்டுகளில்  மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, 5 முறை முதலமைச்சர் பொறுப்பை ஏற்று திறம்பட பணியாற்றினார்.

தமிழக அரசியலில் மட்டுமல்லாது, இந்திய அரசியலிலும் தனது தனித்தன்மையை நிலைநாட்டிய ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தும், சிகிச்சை பலனளிக்காமல், இதே நாளில் (டிசம்பர் 5, 2016) ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவரது மறைவு  அ.தி.மு.க. தொண்டர்களை மீளாத்துயரில் ஆழ்த்தியது.

இன்று அவரது 4வது நினைவு நாள்.