திருவனந்தபுரம்:
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று ஒரு மணி நேரம் இறுதி மரியாதை செலுத்தலாம் என கேரளா அரசு அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக இறந்தவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்த முடியவில்லை. இது மன உளைச்சலை அதிகரிக்கிறது. அதை நிவர்த்தி செய்ய கொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்கள் வீட்டிற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். உடலை ஒரு மணி நேரம் வரை வைத்திருக்கலாம் என கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.