மொரப்பூர்: தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நேரத்தில் 3 பிடிஓ ( வட்டார வளர்ச்சி அதிகாரிகள்)  வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொரப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மதலை முத்து, ஏமக்குடியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ஜெயராமனின் ஏரியூர் ஏ.பள்ளிப்பட்டி வீட்டிலும்,  கள்ளக்குறிச்சி  வட்டார வளர்ச்சி அதிகாரி ஆனந்தனின் அரூர் குறிஞ்சி நகர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஓய்வு பெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்துவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் மதலைமுத்து. இவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ராமன்நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு லஞ்ச புகார் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை சுமார் 9 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட இயக்குநரின் நேர்முக உதவியாளராக பணிபுரியும் ஆனந்தனின் அரூர் குறிஞ்சி நகர் வீடு, ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமனின் பாப்பிரெட்டிப்பட்டி வீடு ஆகிய மூன்று இடங்களி தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். . அதோடு சோதனையின் முடிவிலேயே பணம், ஆவணங்கள் ஏதேனும் சிக்கியுள்ளனவா என்ற விபரங்கள் தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.