திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: முழுவதும் முன்பதிவு இருக்கைகளுடன் இயக்கப்படும் கீழ்க்கண்ட அதிவிரைவு சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கி இருக்கிறது.

அதன் படி திருவனந்தபுரம் சென்டிரல்- டெல்லி (வண்டி எண்: 02625) இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இன்று (புதன்கிழமை) முதல் தினசரி காலை 11.15 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 3வது நாள் மதியம் 1.45 மணிக்கு டெல்லி சென்று சேரும்.

மறுமார்க்கமாக டெல்லி-திருவனந்தபுரம் சென்டிரல் (02626) இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் அக்டோபர் 3ம் தேதி முதல் காலை 11.35 மணிக்கு டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 3வது நாள் மதியம் 3.15 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும் என்று கூறப்பட்டு உள்ளது.