சென்னை: உயிர் காக்கும் மருந்துகள்  இறக்குமதிக்கு சுங்க வரி, ஜிஎஸ்டி விலக்கு அளியுங்கள் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு  முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு,  தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது, விதிக்கப்படும் சுங்கவரி ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மற்றும் இதர வரிகளுக்கு விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிடக் கோரி, மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13-7-2021) கடிதம் எழுதியுள்ளார்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.