சென்னை:  இந்து அறநிலையத்துறை சார்பில் மயிலாப்பூரில் பிரமாண்டமாக கலாச்சார மையம்  உருவாக்கப்படும்  என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னையில் உள்ள பிரபலமான சிவன்கோவிலான கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் பல இடங்களில் உள்ளன. இதில், மந்தைவெளி அருகே உள்ள  ராஜா அண்ணாமலைபுரத்தில்  பெரிய இடம் ஒன்று உள்ளது. இங்குள்ள சுமார்  22.80 கிரவுண்ட் இடத்தில் கலாச்சார மையம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

ரூ.28.76 கோடி மதிப்பீட்டில் மயிலை கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்த இடத்தில் கலாச்சார மையம்  கட்டுவதற்கான  திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

இந்த மையத்தின் . முதல் தளத்தில் 3 கலாச்சார பயிற்சி கூடங்கள், 120 பேர் அமரும் வகையில் செயல்திறன் கூடம், இடம்பெறும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் ,  இந்த மையதானது 22.80 கிரவுண்ட் இடத்தில்  4 ஆயிரத்து 757 சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது.

இந்த கலாச்சார மையத்தின் தரைதளத்தில் தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான காட்சி அரங்குகள் மற்றும் உணவு அறைகள் இடம் பெறும்.

முதல் தளத்தில் 3 கலாச்சார பயிற்சி கூடங்கள், 120 பேர் அமரும் வகையில் செயல்திறன் கூடம், இடம்பெறும்.

2வது தளத்தில் 3 பல்நோக்கு கூடங்கள், 233 பேர் அமரும் வகையில் உணவு அறை இடம்பெறும்.

3-வது தளத்தில் 231 பேர் அமரும் வகையில் ஒரு பல்நோக்கு கூடம் 90 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையிலும் உணவு அறை இடம் பெறும்.

இதுதவிர ஆன்மீக நூலகம், மீட்கப்பட்ட சாமி சிலைகள், பாதுகாப்பு அரங்கம் இடம் பெறும்.

இந்த கலாச்சார மையம் கட்டுவதற்கான  டெண்டர்  விரைவில் விடப்பட்டு பணிகள் தொடங்கும். இந்த கட்டிடத்தில் நியாயமான வாடகையில் கலை நிகழ்ச்சி கள் நடத்த அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.