அபுதாபி: 
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னி சூப்பர் கிங்க்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 101 ரன்கள் அடித்தார்.
ராஜஸ்தான் அணி பந்து வீச்சாளர்களில், ராகுல் 3 விக்கெட்டையும், சேத்தன் சகாரியா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
190 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணியில் அதிகபட்சமாக சிவம் துபே 64 ரன்கள் அடித்தார்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பந்த வீச்சாளர்களில் ஷர்துல் தாக்கூர் இரண்டு விக்கெட்டையும், கேஎம் ஆசிஃப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடரில் நாளை இந்திய நேரப்படி 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடக்க உள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ – பஞ்சாப் கிங்க்ஸ் அணிகளும், இரவு 7.30  மணிக்குத் துபாயில் நடக்க உள்ள போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் மோத உள்ளன.