டெல்லி மதுபான வழக்கில் அப்ரூவராக மாறிய சரத்ரெட்டியின் நிறுவனம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்தது தெரியவந்துள்ளது.

கடந்த 2022 நவம்பரில் Aurobindo Pharma நிறுவனத்தின் இயக்குனர் சரத்ரெட்டி கைதான நிலையில், அதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் ரூ‌.5 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளது.

மேலும் கடந்த 2023 ஜுன் மாதத்தில் அப்ரூவராக மாறுவதாக சரத்ரெட்டி கூறிய பிறகு,

Aurobindo Pharma நிறுவனம் மேலும் ரூ.25 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி பாஜகவுக்கு நன்கொடை அளித்ததும் தெரியவந்துள்ளது

அப்ரூவராக மாறுவதாக அறிவித்த சரத்ரெட்டி தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுபான கொள்கை விவகாரத்தில் சிக்கிய நபரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் பாஜக நன்கொடையாக பெற்றிருப்பதன் மூலம் பாஜக-வின் கொள்கை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.