டெல்லி: லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

லஷ்மி விலாஸ் வங்கி 1926ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கரூா் மாவட்டத்தில் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு உள்ளவா்களுக்கு நிதித்தேவையை பூா்த்தி செய்து வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடியில் இந்த லஷ்மி விலாஸ் வங்கி சிக்கியுள்ளது.

2020ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ரூ.397 கோடி வருவாய் இழப்பை வங்கி சந்தித்தது. இதையடுத்து, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள லஷ்மி விலாஸ் வங்கியின் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மேலும் லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி கூறி இருந்தது. அதனடிப, அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் லஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூர் வங்கியான டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.