டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 13,596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், , இது கடந்த 230 நாட்களில் குறைந்த பதிவு என்றும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும்,  புதிதாக 13,596 பேர் கொரோனா தொற்றால்  பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,40,81,315ஆக உயர்ந்தது.

நேற்று மேலும் 166 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,52,290 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து ஒரே நாளில் 19,582 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 3,34,39,331ஆக உயர்ந்துள்ளது.

தற்போது இந்தியா முழுவதும்  1,89,694 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் நேற்று 12,05,162  பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ,இதுவரை  97,79,47,783 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.