சென்னை

தமிழகத்தில் இன்று 41933 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 34,51,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் 6,50,06,472 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

கொரோனாவால் இன்று மூன்றாவது நாளாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை, இதுவரை மொத்தம் 38,023 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 223 பேர் குணம் அடைந்துள்ளனர் மேலும் 1,173 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்றைய பாதிப்பு 35 ஆக உள்ளது.