கொரோனாவுக்கு தடுப்பூசி இந்தாண்டு இறுதியில் தயாராக இருக்கும் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பிபைஃசர் (PFizer)  நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் சில நிறுவனங்கள் மருந்து தயாரித்து, அதை மனிதர்களிடையே சோதனை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி மேற்கொள்ளும் பரிசோதனையின் முதல் கட்டம் முடிவடைந்து தில் கிடைத்த தரவுகள் லேன்செட் மருத்துவ இதழ்களில் வெளியாகி உள்ள.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசி இறுதியாக வெற்றி பெற்றால் அதனை பெருமளவில் உற்பத்தி செய்ய இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் முயன்று வருகிறது.

இந்த நிலையில், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான பிபிஷர், கொரோனாவுக்கு தடுப்பூசி இந்தாண்டு இறுதியில் தயாராக இருக்கும் என்று தெரிவித்து உள்ளது.
பிபிஷர் நிறுவனம்  பயோஎன்டெக்குடன் என்ற ஜெர்மன் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்கா அந்நிறுவனத்துடன்  இந்த ஆண்டு இறுதிக்குள்  100 மில்லியின் டோஸ் மருந்து வழங்க, சுமார் 2 பில்லியன் டாலர் ஒப்பந்தம் போட்டுள்ளது.
ஃபைசரின் தடுப்பூசி  ஜூலை இறுதிக்குள் 20,000-30,000 நோயாளிகளிடையே பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.
யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் ஜெர்மனியில் நடந்துகொண்டிருக்கும் கட்டம் 1/2 ஆய்வுகளின் ஆரம்ப தரவுகளின் அடிப்படையில் கடந்த வாரம் நான்கு தடுப்பூசி வேட்பாளர்களில் இருவருக்கு ஃபைசர் விரைவான குணத்தை கொடுத்துள்ளதாகவும்,   இது பயனுள்ளதாக நிரூபிக்கப்பட வேண்டும் மற்றும் விநியோகிக்கப்படுவதற்கு முன்பு அவசர அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதன்படி  “அக்டோபர் மாத தொடக்கத்தில்” ஒரு தடுப்பூசிக்கான ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெறும் என நம்புகிறது. அதைத் தொடர்ந்து இந்த  ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசியை சந்தையிடும் என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கர்கள் இந்த தடுப்பூசியை இலவசமாகப் பெறுவார்கள், மேலும் அமெரிக்க அரசாங்கம் கூடுதலாக 500 மில்லியன் அளவுகளைப் பெறலாம்.
2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1.3 பில்லி யனுக்கும் அதிகமான அளவை உற்பத்தி செய்ய முடியும் என்று ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
“கொரோனா மருந்து தயாரிக்கும் பந்தயத்தில் இப்போது ஃபைசர் முன்னணி குதிரைகளில் ஒன்றாகும். பல வெற்றியாளர்கள் இருக்கலாம். எங்களுக்கு பல வெற்றியாளர்கள் தேவை” என்று கனெக்டிகட் கவர்னர் நெட் லாமண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.