பிரிட்டன்:

ங்கிலாந்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

இங்கிலாந்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்காக பல நிறுவனங்களில் கொரோனா சோதனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 250 பேருக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.

ஆனால் தற்போது 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நிறுவனங்களில் செய்யப்படும் சோதனையின் முடிவுகள் 30 நிமிடத்தில் வெளியாகும் என இங்கிலாந்தின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.