லண்டன்:
டுத்த ஆண்டுக்குள் மக்கள் தொகையில் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு, ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


ஜி-7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஐவ்ஸ் நகரில் உள்ள கார்பில் பே பகுதியில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கலந்துகொண்டார்.

இதுகுறித்து கேப்ரியேசஸ் கூறுகையில், நம்மிடம் உள்ள சவால் இந்த கொரோனா தொற்றை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். அடுத்த முறை ஜி-7 நாடுகளின் கூட்டம் ஜெர்மனியில் நடைபெறும்போது உலக மக்கள்தொகையில் 70% மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.