பெய்ஜிங்: கொரோனா வைரசால் சீனாவின் பங்கு வர்த்தகம் அதல பாதாளத்தில் விழுந்திருக்கிறது. பங்குச் சந்தையில் 420 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரசால் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்தது. சீன சந்தைகள் கடைசியாக ஜனவரி 23 அன்று வர்த்தகம் செய்தபோது இது 17 ஆக இருந்தது.
அதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக சரிவை சந்தித்து இருக்கிறது. மத்திய வங்கிக்கு பணம் தரப்படாலும் தொடர்ந்து பாதிப்பு இருந்து கொண்டே உள்ளது.
ஷாங்காய் நகரத் வர்த்தகம் செய்யும் எண்ணெய், இரும்புத்தாது, தாமிரம் என பெரும்பாலான பொருட்களின் விலை சரிவை சந்தித்து இருக்கிறது. இந்த வைரஸ் வேகமாக பரவுவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இழுக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது, இந்த நிலைமை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று பொருளாதார நிபுணர் ஐரிஸ் பாங் கூறி இருக்கிறார்.
தொழிலாளர்களில் எத்தனை பேர் தங்கள் தொழிற்சாலைகளுக்கு திரும்புவார்களா என்பது நிச்சயமற்றது. கொரோனா வைரஸ் பரவலால் கார்ப்பரேட் வருவாயை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. உணவகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மிகக் குறைந்த விற்பனையைக் கொண்டிருக்கலாம் என்றார்.
2,500 க்கும் மேற்பட்ட பங்குகள் தினசரி வரம்பான 10 சதவீதத்தால் சரிந்தன. தாமிரம் 3 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த அளவிற்கு சரிந்தது, அதன் தினசரி வரம்பான 7 சதவீதத்தால் சரிந்தது. அதே நேரத்தில் அலுமினியம், துத்தநாகம் மற்றும் ஈயம் 4 சதவீதத்திற்கும் மேலாக குறைந்தது.
[youtube-feed feed=1]