சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 15,830 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது. அதிக பட்சமாக சென்னையில்,  4,640 பேர் பாதிக்கப்பட்டனர்.  தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 13ஆயிரத்து 502ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனாவால் இதுவரை 13,728 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில், இதுவரை 1,18,614 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,82,849 பேர் குணமடைந்துள்ளனர். துரதிருஷ்டவசமாக இதுவரை 4,629 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில், 31,1346 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் தற்போது 10 சதவீதம் பேர் சிகிச்சையிலும், 89 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் .உயிரிழப்பு விகிதம் 1.47 ஆக உள்ளது.

சென்னையில் குறிப்பிட்ட 5 மண்டலங்களில் தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ளது. அதன்படி,  தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு, ராயபுரம் ஆகிய மண்டலங்களில் அதிக அளவில் தொற்று ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் 3210 பேரும், அண்ணாநகரில் 3165 பேரும், கோடம்பாக்கத்தில் 2,935 பேரும் , அடையாரில் 2503 பேரும், ராயபுரத்தில் 2170 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மொத்தம் 31 ஆயிரத்து 142 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்

சென்னையில் இதுவரை சுமார் 14 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

சராசரியாக நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

10க்கும் அதிகமானோர்  கொரோனா தொற்றுடைய நபர்களை கொண்ட தெருக்கள் 315 என கணக்கிடப்பட்டுள்ளது.

சென்னையில் 6க்கும் அதிகமான கொரோனா தொற்றுடைய நபர்களை கொண்ட தெருக்கள் 295.

இந்த பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.