டெல்லி: புனே, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் கொரோனா தொற்றின் புதிய ஹாட்ஸ்பாட்களாக மாறி உள்ளன.
இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தொற்று ஜனவரி 30 அன்று பதிவாகியிருந்தாலும், உண்மையில் மார்ச் முதல் வேகமாக பரவ தொடங்கியது பின்னர் ​​மும்பை, டெல்லி மற்றும் சென்னை போன்ற பெரு நகரங்களில் கடும் பாதிப்பை தந்திருக்கின்றன.
கடந்த மாதங்களில் இந்த நகரங்களில் கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து, மும்பையில் மட்டும் 1 லட்சம் என தாண்டியது, இது அகமதாபாத், இந்தூர் போன்ற இடங்களுக்கும் பரவியது.
இப்போது பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில், கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அவை இப்போது ஹாட் ஸ்பாட் பகுதிகளாக மாறியுள்ளன.
பெங்களூரில் கொரோனா வழக்குகள் சராசரியாக ஒரு நாளைக்கு 12.9 சதவீதமாக உயர்ந்துள்ளன. அதே நேரத்தில் இறப்புகள் ஒரு நாளைக்கு 8.9 சதவீதம் அதிகரித்துள்ளன.  மும்பை அதன் மக்கள்தொகையில் ஒரு மில்லியனுக்கு அதிகபட்சமாக 345 இறப்புகள் பதிவாகி உள்ளன.
மும்பையில் குறைய தொடங்கிய போது, புனேயில் அதிகரிக்க தொடங்கி உள்ளன. இதேபோல், சென்னையில் எண்ணிக்கை குறைந்து வருகிறது, ஆனால் அவை பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் அதிகரித்து வருகின்றன.