பெங்களூரு:

ர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவருகிறது. இன்று  புதியதாக 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 277ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், ஊரடங்கு உத்தரவு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று 260 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 277ஆக உயர்ந்துள்ளது.

அதுபோல, அங்கு இதுவரை 11 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், நோய் தொற்றில் இருந்து இதுவரை 75 பேர் குணமடைந்து உள்ளதாகவும் மொநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.