சென்னை:
ம்எல்ஏக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம், முதல்வர் மற்றும் சட்டமன்ற ஊழியர்கள், எம்எல்ஏக்களுக்கு கொரோனா நோய் தொற்று  சோதனை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டப்பேரவையின்  பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா உறுதியானதால்,  அனைத்து உறுப்பினர்களுக்கு சட்டமன்ற கமிட்டி அறையில் முதல்வர் ,சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதனிடையே எம்.எல்.ஏ ஜெயபாலுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் 7 நாட்கள் தனிமையில் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்பேரில் பல எம்.எல்.ஏ.க்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.