சீனா:
கொரோனா தொடர்பான இறப்பு எண்ணிக்கை சுமார் 60 ஆயிரம் என்று சீன அரசு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி கட்டுப்பாடுகளை சீனா தளர்த்திய பின்னர் கோவிட் வேகமாகப் பரவத் தொடங்கியது. தினமும் 5 அல்லது 10 பேர் மட்டுமே உயிரிழப்பு என்று சீனா உண்மைகளை மூடி மறைப்பதாக உலக சுகாதார அமைப்பு முதல் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில், நேற்று சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை கிட்டதட்ட 60 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளது.