புதுச்சேரி:
புதுச்சேரி ஆளுநர் மாளிகை ஊழியருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், ஆளுநர் மாளிகையை 48 மணி நேரம் மூடி சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டது. அதையடுத்து ஆளுநர் கிரண்பேடி உள்பட ராஜ்நிவாசில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கு ம் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் கவர்னர் கிரண்பேடிக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.  புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து 48 மணி நேரத்திற்கு ஆளுநர் மாளிகை மூடப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து, கவர்னர் உட்பட அனைத்து ராஜ்நிவாஸ் ஊழியர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாதவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை கவர்னர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்று  கவர்னர் மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்,  அவருக்கு தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.