சென்னை: சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 111 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார்.

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 55 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி  இருந்தது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 78ஆக இருந்தது. இந்த நிலையில், இன்று பாதிப்பு 111 ஆக உயர்ந்துள்ளதாக அங்கு ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதனால்,  ஐஐடியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 111 ஆக உயர்வு இதுவரை 3,080 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை  என்று கூறியவர், மக்கள் முக்கவசம் அணிவது அல்லது. கொரோனா இல்லை என மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்; தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.