சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 50ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இன்று மட்டுமே மேலும் 5,870 பேர் புதியதாக தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 61 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,748 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,859 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,98,366 -ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர்  87.04% ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், 51,583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் 81,793 பேருக்கு தொற்று சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை  52,12,534 பேருக்கு தொற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் அரசு மற்றும் தனியாரைச் சேர்ந்த  160 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

பிற மாநிலங்களில் இருந்து இன்று தமிழகத்திற்கு வந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 2,76,255 பேரும், பெண்கள் 1,81,413 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 12 வயதிற்குள் 20,728 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 3,77,145 பேரும், 60 வயதிற்கு மேல் 59824 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.