வாஷிங்டன்:
சீனாவில் இருந்து பரவிய கொரோனா அமெரிக்காவை நாசப்படுத்தி வருகிறது. அங்கு பலி எண்ணிக்கை மட்டுமே  81,795 ஆக உயர்ந்துள்ளது.  இது  அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலக வல்லரசான அமெரிக்கா கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தமுடியாமல் திணறி வருகிறது. உலக நாடுகளிலேயே  அதிக அளவிலான  பேரழிவை சந்தித்து வருகிறது.
 இதுவரை உலக அளவில் கொரோனா வைலரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  42,55,942 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,87,332 பேர் உயிரிழந்துள்ளனர். =
அமெரிக்காவில் மட்டும்  13லட்சத்து 85 ஆயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81 ஆயிரத்து 795 பேர் இ உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் நோயால், அமெரிக்காவில், பலியோவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து மடிகிற நிலையில்,  நேற்று மட்டும் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாளுக்குநாள் அதிகரிக்கும் உயிரிழப்பின் எண்ணிக்கை அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாடுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பலி எண்ணிக்கையில் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது.
தொடர்ந்து   2-வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. இங்கு மொத்தம் 2,68,143 பேர் பாதிக்கப்பட்டி ருக்கின்றனர். மொத்தம் 26,744 பேர் இங்கு உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் 32,065 ஆகவும் பாதிப்பு 2,23,060 ஆகவும் இருக்கிறது,.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் ரஷ்யா உள்ளது. ரஷ்யாவில் 221,344 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இத்தாலியில் கொரோனாவால் 30,739 பேர் பலியாகி உள்ளதாகவும், . பிரான்ஸில் 26,643 பேரும் பிரேசிலில் 11,625 பேரும் கொரோனாவால் உயிரிழந்து இருப்பதாக உலக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.