சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனாவால் பெற்றோர்கள்  பாதிக்கப்பட்ட வரும் நிலையில், அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்யேக தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளார். அதன்படி, தேவைவப்படுவோர் 9944290306- 044-25952450 இந்த எண்களில்  தொடர்பு கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை பூர்த்தி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், கொரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வரும் பெற்றோரின் குழந்தைகள், உணவு மற்றும் உறைவிடம் தேவைப்படும் குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை பூர்த்தி செய்ய குழந்தைகள் நலக் குழுவை தொடர்பு கொள்ளலாம்.

இதுபோன்று சூழ்நிலையில் உள்ள குழந்தைகளை கண்டால், மாவட்ட கலெக்டர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.58, சூரியநாராயண சாலை, ராயபுரம், சென்னை-13 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், dcpschennai2@gmail.com என்ற மின்னஞ்சல், 9944290306- 044-25952450 ஆகிய தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

இது தவிர, குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண்-1098, குழந்தைகள் நலக் குழுவின் வடக்கு மண்டலத் தலைவர் – 9840135503, தெற்கு மண்டலத் தலைவர் – 9840083620, மத்திய மண்டலத் தலைவர் – 9841889069 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.