டெல்லி: இந்தியாவில் தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமாகி உள்ளது அதனால், ஊரடங்கு அமல்படுத்தப்பபட வேண்டியது அவசியம் என எய்ம்ஸ் தலைவர் வலியுறுத்தி உள்ளார்.

கடந்த 2019 ஆம் வருடம் இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா தொற்று, ஓராண்டை கடந்தும் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இடையில் ஒருசில மாதங்கள் தொற்று பரவல் குறைந்திருந்த நிலையில், தற்போது 2வது அலையாக மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த பரவலை தடுக்கும் வகையில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில், தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 89,019 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அதிகாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா மீண்டும் தீவிரமாக பரவியுள்ள  11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலைமைச் செயலக அதிகாரிகள் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சக செயலாளர் ராஜீவ் கவுபா ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, தொற்று பரவலை  தடுக்கும் வகையில் கொரோன பாதுகாப்பு நெறிமுறைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த எய்ம்ஸ் தலைவர் ரந்தீப்,  “நாடு முழுவதும கடந்த சில நாட்களாக தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதை உடனே தடுக்க வேண்டியது அவசியம். இதற்காக  சிறிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதுடன், சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்காததும் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்வதுமே தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது என்றார்.