டேரோடூன்: பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத்தில் உள்ள 39 ஊழியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

 

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந் நிலையில் ஹரித்துவாரில் உள்ள பதாஞ்சலி நிறுவனத்தில் உள்ள 39 ஊழியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இது குறித்து ஹரித்துவார் முதன்மை மருத்துவ அதிகாரி எஸ்கே ஜா கூறி இருப்பதாவது: கடந்த ஞாயிறன்று 2034 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அதே நேரத்தில், மாவட்டத்திலிருந்து பல இடங்களில் 852 ஆர்டி-பி.சி.ஆர் மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டு உள்ளன. அவற்றின் முடிவுகள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வரும் என்று கூறினார்.