வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 92,519 உயர்ந்து 29,21,201 ஆகி இதுவரை 2,03,289 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  92,519 பேர் அதிகரித்து மொத்தம்29,21,201 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6194 அதிகரித்து மொத்தம் 2,03,289 பேர் உயிர் இழந்துள்ளனர்.  8,36,969 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  57,863 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,719 பேர் அதிகரித்து மொத்தம் 9,60,896 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2074 அதிகரித்து மொத்தம் 54,265 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,18,162  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 15,110 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3995  பேர் அதிகரித்து மொத்தம் 2,23,759 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 378 அதிகரித்து மொத்தம் 22,902 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 95,708 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 7705  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2367  பேர் அதிகரித்து மொத்தம் 1,95,361 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 416 அதிகரித்து மொத்தம் 26,384 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 60,498 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 212 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரான்சில் நேற்று 1,660 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,61,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 369 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 22,614 ஆகி உள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1836  பேர் அதிகரித்து மொத்தம் 26,283 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 45 அதிகரித்து மொத்தம் 825 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 5939 பேர் குணம் அடைந்துள்ளனர்.