புதுடெல்லி:
கொரோனா தொற்றால் ஏற்படும் தினசரி உயிரிழப்பு, ஆறு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக 300-க்கும் கீழ் குறைந்ததுள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்படும் தினசரி உயிரிழப்பு, ஆறு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக 300-க்கும் கீழ் குறைந்ததுள்ளது. சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 251 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த சனிக்கிழமை (26.12.2020) காலை வரையிலான 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் மேலும் 22,273 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,01,69,118-ஆக அதிகரித்துள்ளது.

அதே கால அளவில் மேலும் 251 போ் உயிரிழந்ததால், கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,47,343-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 22,274 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 97,40,108-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 95.78 சதவீதமாகும்.

சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை குறைவு: தொற்றில் இருந்து குணமடைவோா் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

தொடா்ந்து 5-ஆவது நாளாக சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 2,81,667 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 2.77 சதவீதமாகும்.

புதிதாக ஏற்பட்ட 251 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 71 பேரும், அதைத் தொடா்ந்து, மேற்கு வங்கத்தில் 31 பேரும், தில்லியில் 30 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி டிசம்பா் 25-ஆம் தேதி வரை 16.71 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 8,53,527 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.